சென்னை புழல் சிறையில் போதை மாத்திரை காணாமல் போனதாக சக கைதியை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி பூபாலன் என்பவர் சக கைதி திவாகரன் என்பவரின் பையில் மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அதனை கேட்டு திவாகரனுடன் கைதி பூபாலன், தகராறில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து போதை மாத்திரைகளை எடுத்ததாக கைதி கோவிந்தராஜை திவாகரன் தனது கூட்டாளிகளான ஆடு மணி, சரவணன், தினேஷ், ராஜசேகர், அலெக்சாண்டர் உடன் தாக்கினார். இது தொடர்பாக 7 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.