சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பூமாயி அம்மன் கோயில் 15ம் ஆண்டு வசந்த விழா, கடந்த ஏப் 18ம் தேதி கொடியேற்றப்பட்டு, காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் பொங்கல் வைபவத்தை ஒட்டி, கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்த பெண்கள் சங்கு முழங்கியும், குலவை இட்டும் மகிழ்ச்சியடைந்தனர்.