சென்னை ஓட்டேரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம், அப்பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக புகாரளித்த பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், தம்முடன் பாதுகாப்புக்கு வந்திருந்த ஓட்டேரி உதவி ஆய்வாளரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.