திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாரியம்மன் கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை மட்டும் சாமி தரிசனம் செய்ய விடாமல் தனிநபர் ஒருவர் தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புருஷோத்தமன் என்பவர் ஆதிதிராவிட மக்கள் சாமி தரிசனம் செய்ய வரும் போதெல்லாம் கோயிலை மேற்பார்வை செய்வது போல, தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.