news-tamil-logo

3/19/2026, 8:45:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்திற்கான தண்ணீரை நிறுத்திய NLC நிர்வாகம்.. நாற்றங்காலுக்கு குடத்தின் மூலம் தண்ணீர் தெளிக்கும் விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்திற்கான தண்ணீரை நிறுத்திய NLC நிர்வாகம்.. நாற்றங்காலுக்கு குடத்தின் மூலம் தண்ணீர் தெளிக்கும் விவசாயிகள்

காத்தாழை, கடலூர்

Posted on: Oct 01, 2024 10:03 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காத்தாழை, கடலூர்

கடலூர் மாவட்டம் காத்தாழை கிராமத்திற்கு விவசாய நிலங்களை பார்வையிட சென்ற புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவனிடம் NLC நிர்வாகம் தண்ணீரை நிறுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் தண்ணீரை நம்பி, கத்தாழை கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில் திடீரென என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது.

நாற்றங்காலை காப்பாற்ற விவசாயிகள் குடத்தின் மூலம் தண்ணீர் தெளித்து பயிரை காப்பாற்ற போராடும் நிலையில்,நிலத்தை கையகப்படுத்துவதில் அக்கறை காட்டும் என்எல்சி நிர்வாகம், விவசாயிகளின் வாழ்வாதாரம் இழப்பீடு ஆகியவற்றில் காட்டுவதில்லை என புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் குற்றஞ்சாட்டினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved