திருச்சி மாவட்டம் வளநாடு அருகே நகைக்காக ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெருமாள் என்பவர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், 2 செல்போன் மற்றும் பணத்தோடு ஒன்றரை வயது குழந்தையும் தூக்கி சென்றுள்ளனர். அந்த குழந்தை சத்தம் எழுப்பியதை அடுத்து, கழுத்தில் இருந்த தங்க தாயத்தை பறித்துக் கொண்டு இறக்கி விட்டுள்ளனர்.