சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம், உறவினர்கள் அதிர்ச்சிதிருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளார். அவரது உடல் நேற்று மாலை மண்ணியாற்று கரையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இன்று காலை சடங்குகள் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தற்போது, தகவல் அறிந்து பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரித்து வருகின்றனர். மந்திரவாதிகள் நரபலி கொடுப்பதற்காக உடலை தோண்டி எடுத்துச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.