Also Watch
Read this
By: Web Team

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கடந்த 27ம் தேதி பி.காம் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மாநகர போலீசார், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved