சென்னை கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரும்பாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை என்பருடைய கடைக்கு அடிக்கடி வந்த ஒரகடம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அண்ணாமலை பணம் கொடுத்த நிலையில்,கடையை பெற்று தராததால் பின்னர் ஏமாற்றியதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.