Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி, இரை தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் காயங்களுடன் மீட்கப்பட்டது. ஆரணி பஜார் பகுதியில் திடீரென நாய்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய புள்ளிமானை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், நாய்களை விரட்டி அடித்து மானை மீட்டனர்.
தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், மானை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பதற்காக கொண்டு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved