மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, மதுரை காவல் ஆணையரிடம் பல்வேறு அமைப்பினர் புகாரளித்துள்ளனர். அதில், மத மோதலையும், மதக் கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.