நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர், வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவையை சேர்ந்த முதியவர், தனது நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க உத்தரவிட்டதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.