Also Watch
Read this
By: Manigandan Raja

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குத்திர பாஞ்சன் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அருவியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள கன்னிமாரா தோப்பு ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
பணகுடி குத்திரபாஞ்சானில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னிமரா தோப்பு ஓடையில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
இந்த சீசனை அனுபவிக்கும் விதமாக மழை சாரலில் நினைந்த படியே சுற்றுலா பயணிகள் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடுவதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நலன் கருதி போலீசார், மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நீர் வரத்து அதிகளவில் வர தொடங்கினால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கன்னிமாரா தோப்பு ஓடையிலும் அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved