கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து. வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நாச்சிகுப்பம், தடத்தாரை, மாதேப்பள்ளி, தீர்த்தம் மற்றும் சின்னகொத்தூர் ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.