Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 12:44 PM
By: Web Team

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அடையக்கருங்குளம் விநாயகர் காலனி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அடையக்கருங்குளம், அகஸ்தியர்ட்டி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விநாயகர் காலனி மூன்றாவது தெருவில் வீடுகளை மழைநீர் சூழந்தது. இப்பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளை வெள்ள சூழ்வது தொடர்கதையாக இருந்து வருவதாக கூறும் அப்பகுதி வாசிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved