மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய நபரை கைது செய்ய கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.