Also Watch
Read this
Posted on: Dec 07, 2025 09:00 AM
By: Web Team

ஈரோடு மாவட்டம் பவானியில் கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டிய 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 12 சவரன் நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர். நவம்பர் 30ஆம் தேதி பவானி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்மகும்பல் மூன்று பெண்களிடம் 5 சவரன் தாலிக்கொடி உட்பட 12 சவரன் நகையை திருடி சென்றது. நகையை பறி கொடுத்தவர்கள் அளித்த புகாரில் போலீசார் கும்பாபிஷேக வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கோவை மதுக்கரையை சேர்ந்த கும்பலை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved