Also Watch
Read this
By: Manigandan Raja

அனுமதி இன்றி மணல் அள்ளிய கும்பல் :
அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக தஞ்சை மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரி புவனேஸ்வரிக்கு கிடைத்த ரகசிய தகவல் பெயரில் தஞ்சாவூர் மாவட்டம் பூதராயநல்லூர் கிராமம் ஓரமாக உள்ள வெண்ணாற்றில் அனுமதி இன்றி 5, லாரிகளில் மணல் அள்ளி வந்து கொண்டிருந்தபோது.
அந்த வழியாக ரோந்து வந்த சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரி புவனேஸ்வரி சுற்றி வளைத்து பிடித்து லாரி டிரைவர்கள் ராஜ்குமார் வயது 32 ஐயப்பன் வயது 29 சரத்குமார் வயது 27 பிரகாஷ் வயது 40 தட்சணாமூர்த்தி வயது 54 உள்ளிட்டோரை திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி போலீசார் லாரி டிரைவர்களை கைது செய்தும் லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தஞ்சையில் அதிரடிய காட்டிய சுரங்கம் மற்றும் மற்றும் புவியியல் துறை அதிகாரி புவனேஸ்வரிக்கு பொதுமக்கள் பாராட்டு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved