திருத்தணியில், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது போன்ற ஒத்திகை, மெய் சிலிர்க்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, தீ விபத்து தடுப்பு ஒத்திகை, மீட்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்டால் தீயை எப்படி அணைப்பது, கரும்புகையில் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது என்பன குறித்து தொழிலாளர்கள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.