Also Watch
Read this
By: Web Team

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் பழைய டயர்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் காதர் பாஷா என்பவர் பழைய டயர்களை வாங்கி பழுது பார்த்து, மீண்டும் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் குடோனின் தரைத்தளத்தில் அடுக்கி வைத்திருந்த டயர்கள் தீப்பிடித்து எரிந்தன.
சிறிது நேரத்தில் மற்ற பகுதிக்கும் தீ பரவியதால், வானுயர புகை கிளம்பியது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved