Also Watch
Read this
By: Manigandan Raja

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர சேர்ந்த அய்யாசாமி என்பவர் மகன் சண்முகம். இவர் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் நர்மதா இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று இரவு அந்த ஆலையின் குச்சி குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை அதிகமாக வெளிவர தொடங்கியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் குடோனில் இருந்த 40 மூட்டை குச்சிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரம் ஊழியர்கள் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved