Also Watch
Read this
By: Manigandan Raja

தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர் :
சேலம் மல்லமூப்பன்பட்டி பகுதியை சேர்ந்த தேவி(47) என்பவர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர் திடீரென்று தேவியின் கழுத்தில் இருந்த நகைகளை பற்றி இருந்துள்ளார்.
இதில் நிலைகுலைந்த தேவி, வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதற்கிடையில் மரமநபர் தேவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். கை, கால், முகத்தில் படுகாயமடைந்த தேவி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை சோதனை செய்ததில், நகையை பறித்து சென்ற மர்மநபர்,
தேவியை பின்தொடர்ந்து சென்ற காட்சி பதிவாகி உள்ளது. அதனை கொண்டு நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved