Also Watch
Read this
Posted on: May 01, 2025 01:36 PM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வெள்ளைபூசணிக்கு உரிய விலை கிடைக்காததால், அவைகளை விவசாயிகள் சாலையில் வீசிச் சென்ற அவலம் காணப்பட்டது.
இம்மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, மாரநாடு, சலுப்பனோடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சீதோஷண நிலை மாற்றம், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் ஒழுங்கற்ற வடிவில் வெள்ளைபூசணி விளைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஒரு டன் வெள்ளைபூசணி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலைபோவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved