தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த நாயால் கட்டுப்பாட்டை இழந்த வேன் வணிக வளாகத்திற்குள் புகுந்து நின்றது. பெரியகுளம் பகுதியை சேர்ந்த கண்ணன் நெல்லையில் உள்ள உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்தாரோடு அதிகாலை வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஆண்டிப்பட்டி- தேனி சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே வந்தபோது சாலையின் நடுவே நாய் வந்ததால் விபத்து ஏற்பட்டது. அப்போது வேன் வணிக வளாகத்திற்குள் புகுந்ததில் சுவர் சேதம் அடைந்தது.