அரூர் அரசு கலைக் கல்லூரியில் தர்மபுரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அவர்கள் உத்தரவு படி அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியரிடம் விழிப்புனர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. வங்கா நரி மற்றும் நரிகளின் முக்கியத்துவம்கூட்டத்தில் பேசிய வன பாதுகாப்பு படை வனச்சரகம் வன அலுவலர் பெரியண்ணன், தமிழ்நாட்டில் வனத்துறை வங்கா நரி மற்றும் நரிகளின் முக்கியத்துவம் உணர்ந்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறினார். குறிப்பாக வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், சூழலில் சமநிலை வங்காநரி ஒரு முக்கிய வேட்டையாடும் விலங்கு இவை எலிகள் மற்றும் பூச்சிகள், வண்டுகள், கரையான்கள் போன்றவற்றை உண்பதால் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்பாடு இல்லாமல் அதிக இருப்பதை தடுப்பதாக தெரிவித்தார்.குள்ள நரிகள் இயற்கையான பூச்சிகொல்லி விவசாய பாதுகாப்பு பயிர்களை சேதப்படுத்தும் எலி மற்றும் சிறு பூச்சிகளை உண்பதன் மூலம் நரிகள் இயற்கையான பூச்சி கொல்லிகளாக செயல்படுகிறது. விதை பரவல் தாவரங்கள் மற்றும் பழங்களை உண்பதால் விதைகள் பரவலுக்கு உதவுகின்றன இது காடுகள் மற்றும் புல்வெளிகளில் பகுதிகளில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமானது என தெரிவித்த பெரியண்ணன், சூழல் ஆரோக்கியம் இவை வாழும் புல்வெளி மற்றும் வறண்ட நிலங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் உணர்த்தும் வகையில் குள்ளநரிகள் ஒரு குறிப்பிட்ட இனமாக செயல்படுகின்றது என கூறினார்.குள்ளநரிகள் விவசாயிகளின் நண்பன்குள்ளநரிகள் விவசாயிகளின் நண்பன் என்றும் குள்ளநரிகள் ஒரு சூழலில் சமநிலைப்படுத்துவதன் எலிகள் வேல்ஸ் மற்றும் முயல்கள் போன்ற விவசாய பயிர்களை அழிக்கும் சிறிய பாலூட்டிகளை கட்டுப்படுத்துகின்றன எனவும் தெரிவித்த அவர், குள்ளநரிகள் மயில்களின் மொட்டைகளை உண்பதால் அதனுடைய வளர்ச்சியை பெரிதளவில் கட்டுப்படுத்துதல் விவசாய விலைப் பொருட்களின் அதிகப்படியான சேதம் தவிர்த்து வாழ்வாதாரம் உயர வழிவகை செய்கிறது என தெரிவித்தார். சுற்றுச்சூழலை தூய்மை செய்பவன் குள்ளநரியில் ஒரு இயற்கை விதை பரப்பான் பழங்கள் உண்பதன் மூலம் விதைகள் பரவும் தாவரங்கள் வளரவும் உதவுகின்றன என்றும் குள்ளநரிகள் ஒரு சுற்றுச்சூழல் தூய்மை செய்பவன் இறந்த விலங்குகள் மற்றும் அழுகிய தாவரங்களை உண்பதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மைக்கு உதவுகின்றன என கூறினார்.குள்ளநரிகள் இயற்கையின் ஒரு பூச்சிக்கொல்லி குள்ளநரிகள் இயற்கையின் ஒரு பூச்சிக்கொல்லி பூச்சிகள் புழுக்கள் மற்றும் பிற சிறப்பு பூச்சிகளை உண்பதன் மூலம் பூச்சிக்கொல்லியாக செயல்படுகின்றது போன்ற கருத்துக்களை பெரியண்ணன் மாணவ, மாணவிகள் முன்பு எடுத்துரைத்தார். Related Link எதற்கு இந்த பரிகார யாகம்?