Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காக எடுக்கப்பட்ட ஏரி மண்ணை, சட்டவிரோதமாக வாங்கி தனது வயலில் கொட்டியதாக திமுக பெண் கவுன்சிலர் சின்னம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நேதாஜி நகரில் கட்டப்பட்டும் வரும் பேருந்துநிலைய கட்டுமானப் பணிக்காக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, பொன்விளைந்த களத்தூரில் உள்ள ஏரியில் மண் எடுக்கப்படுகிறது. அதனை, சின்னம்மாள் முறைகேடாக வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved