Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆறுபாதி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள், பலத்த காற்றுடன் கூடிய மழையால் சாய்ந்து பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குலை தள்ளிய வாழை மரங்கள், மொட்டு விடும் தருவாயில் உள்ள வாழை மரங்கள் என 500க்கும் மேற்பட்ட வாழைகள் தரையோடு சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved