நாட்டுப்பற்று என்பது நாட்டின் மீதான பற்று என்பதை காட்டிலும், மனிதர்களின் மீதான பற்றாக இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட்டில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பத்து கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் அமைக்கப்படும் என்றார்.