Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், அதில் பயணித்த தம்பதி நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தை சேர்ந்த தினகரன் - மஞ்சுளா தம்பதி, தங்களது காரில் சொந்த ஊரான வேலூருக்கு சென்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வந்த போது, காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வரவே சாலையோரமாக நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினர்.
அதன் பின் கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது.
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் சேதமானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved