Also Watch
Read this
By: Manigandan Raja

உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் :
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக கார்த்தி (35) இந்த நிலையில் சின்னப்பள்ளம் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மகன் டேவிட்
தாஸ் (45) என்பவர் வழக்கு தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலைய வந்துள்ளார்.
குடிபோதையில் காவல் நிலையம் வந்த டேவிட் தாஸ் தலைமை காவலர் சரவணன் பணியில் இருந்தபோது அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி ரோந்து பணியில் இருந்து காவல் நிலையம் வந்தபோது வெளியே வந்த டேவிட்தாஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியும்.
அவரைஅரசு பணியினை செய்ய விடாமலும், டேவிட்தாஸ் ஹெல்மெட்டை எடுத்து சப் இன்ஸ்பெக்டரின் வலது தோள் பட்டையில் அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து டேவிட்தாஸ் அந்த ஹெல்மெட்டை காண்பித்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து சப்-இனஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டேவிட் தாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved