Also Watch
Read this
Posted on: Apr 21, 2025 03:27 AM
By: Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொலை வழக்கு பதியப்பட்ட நபர் சுமார் 31 ஆண்டுகளுக்கு பின் அசாமில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு, அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை ஒன்று நடந்தது.
இதில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரில், ஒருவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதனடிப்படையில் பாஸ்கர் ஜோதி கோகாய் என்ற நபரை சுமார் 31 ஆண்டுகளுக்கு பின் அசாமில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved