Also Watch
Read this
Posted on: Oct 28, 2025 09:28 AM
By: Web Team

ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டதால், ஆரணி ஆற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான ஆயிரத்து 853 மில்லியன் கன அடியில், தற்பொழுது ஆயிரத்து 525 மில்லியன் கன அடியை எட்டியதால், உபரிநீர் முழுவதுமாக திருவள்ளூர் ஆரணி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் அல்லிக்குழி, ஊத்துக்கோட்டை, சேத்திப்பாக்கம், பூவாலம்பேடு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் சென்று ஆற்றை பார்வையிடவோ, குளிக்கவும் செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved