Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் புளியடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமணி என்பவர் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமபந்தியில் கீழ திருச்செந்தூர் விஏஓ சரவணன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு மனு அளித்துள்ளார்.
அப்போது சரவணன் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுடலைமணி தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால்துரை உத்தரவு பேரின் ஆய்வாளர் அனிதா சிறப்பு உதவியாளர் சுந்தரவேல் மற்றும் போலீசார் ரசாயனம் தழுவிய ரூபாய் நோட்டுக்களை சுடலைமணியிடம் கொடுத்தனர்.

சுடலைமணி லஞ்சம் கேட்ட விஏஓ சரவணன் இடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved