Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு மகோற்சவ இசை விழா மற்றும் பால்குட உற்சவம் நடைபெற்றது.
மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி செவந்தாம்பட்டி மதுரைவீரன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி சுமந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved