Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 10:58 AM
By: Web Team

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், கடற்கரை பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றம் காரணமாக 11 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். புயலால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved