நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கன முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால், வருவாய், தீயணைப்புத் துறை, காவல்துறை, பேரிடர் மீட்பு பணிகள் துறை, வனத்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.