கடலூரில் ஒரே நாளில் 8 இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள், வீடுகளில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரும்பு ராடுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யும் போது தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் இரண்டு பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.