கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில், சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மடப்பட்டு கிராமத்தில் சாலையின் குறுக்கே ஆடு சென்றதால் திடீரென டெம்போ வேன் பிரேக் பிடிக்கவே, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அரசுப் பேருந்து ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதின.