மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் தேக்கம்பட்டி ஊராட்சி பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா தொடங்கி வைத்தார்.புதிய தடுப்பணை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜைமேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் தார்சாலை,காங்கீரிட் சாலை, பூங்கா பராமரிப்பு போன்ற பணிகளுக்கு ஒரு கோடி 36 லட்சமும் அதே போல் தேக்கம்பட்டி ஊராட்சி நஞ்சேகவுன்டன்புதூரில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகளை தொடங்க பூமி பூஜை நடைபெற்றது. பணிகளை தொடங்கி வைத்த ஆ.ராசா எம்.பிநகராட்சி அலுவலகம் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்ட எம்.பிமேலும் தேக்கம்பட்டி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நஞ்சேகவுன்டன்புதூர் பகுதியில் உள்ள மழை நீர் தடுப்பணை உடைந்து சேதமடைந்த தண்ணீர் வெளியேறுவதை பார்வையிட்ட ஆ.ராசா விரைந்து பணிகளை மேற்கொண்டு முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். Related Link ஆழ்துளை கிணறுகளால் ஆபத்து