Also Watch
Read this
Posted on: Sep 01, 2024 11:47 AM
By: Srini Vasan

தாராபுரம் அருகே கிராம விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்து 29, ஆடுகள் பலி. விவசாயிகள் பீதி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஒன்றியம் கருப்பண வலசு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி என்ற பிரகாஷ் வயது 34 பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 80க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்
வளர்த்து வந்தார். நேற்று மாலை வளர்ப்பு ஆடுகளை பட்டியில் அடைத்து ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.
அப்போது, ஆடுகள் திடீரென பீதியுடன் அலறிய சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்த போது, பட்டியில் இருந்து ஒரு மர்ம விலங்கு தப்பி குதித்து ஓடியது. ஆனால், அது என்ன விலங்கு என்பது இரவு நேர இருட்டில் சரிவர தெரியவில்லை. இதனையடுத்து, பட்டிக்கு சென்று பார்த்த போது 29,ஆடுகள் கழுத்தில் ரத்தம் குடித்த காயத்தோடு இறந்து கிடந்தன. மேலும் 1 ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்து. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்
கூச்சலிட்டார்.
அக்கம்பக்கத்தினர் பிரகாஷ் தோட்டத்தின் முன்பு திரண்டு ஆடுகளைக் கொன்ற மர்ம விலங்கை நள்ளிரவு வரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை இதுகுறித்து தகவலறிந்த
மூலனூர் கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி
மற்றும் மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கால்நடை துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தார். மர்ம விலங்கு கடித்து 29 ஆடுகள் பலியான மாடுகளின் மதிப்பு சுமார் 3,லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது,
மூலனூர் பகுதியில் தொடர்கதை போல நடைபெற்றுவரும் சம்பவங்களால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்திலும் பீதியிலும் வேதனையின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved