அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னியா - Nevada எல்லையின் Tahoe தேசிய வனப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் தீக்கிரையாகின. இந்நிலையில் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க வனத்துறையினரும், மீட்பு படையினரும் போராடி வருகின்றனர்.