அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு : இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்ரேல் மீதும் ஈரான் எந்நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என்பதால், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் வெளியேறும்படி இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தி உள்ளார். Related Link ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்