Also Watch
Read this
By: Web Team

உக்ரைன் மீதான போரை ரஷ்யா 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது 100 சதவிகித வரி விதிக்கப்படுவதுடன் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேட்டோ பொதுச் செயலாளர் Mark Rutte ஐ சந்தித்த போது உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து டிரம்ப் விவாதித்தார். அதன் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ரஷ்யாவின் நடவடிக்கை தமக்கு மிகுந்த அதிருப்தியை அளித்து வருவதாக கூறினார்.
உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளையும் கடந்து நீடிக்கும் நிலையில், மேற்குலக நாடுகள் ரஷ்யாவுடன் தங்களது பொருளாதார உறவுகளை துண்டித்துள்ளன. எனினும் இந்தியா மற்றும் சீனாவுக்கு எண்ணெயை விற்று ரஷ்யா கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved