கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி வாடிகனில் நாளை துவங்குகிறது. Sistine Chapel என்ற தேவாலயத்தில் 133 கார்தினால்கள் ஒன்று கூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர்.காலை, மாலை என இரண்டு முறை ரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒருமித்த தேர்வு எட்டப்பட்டால், ஆலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகையும், தேர்வு எட்டப்படா விட்டால் கரும் புகையும் வெளியேறும்.