Also Watch
Read this
Posted on: Feb 08, 2026 10:05 AM
By: Manigandan Raja

வான்வெளி மூடல் :
திட்டமிடப்படாத இராணுவ நடவடிக்கையின் காரணமாக தென் கிழக்கு போலந்தின் வான்வெளி மீண்டும் மூடப்பட்டுள்ளதாக Flight Radar 24 இணைய தளம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி அத்து மீறல்கள் காரணமாக, தென் கிழக்கு போலந்தில் உள்ள zeszow மற்றும் Lublin விமான நிலையங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும், தனது வான்வெளிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என கடந்த மாதம் கூறியது.
இந்நிலையில் போலந்து நேட்டோ போர் விமானங்களை பயன்படுத்துவதால் லூப்ளின் விமான நிலையத்தை அணுக முடியவில்லை என Flight Radar 24 தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved