Also Watch
Read this
By: Manigandan Raja

குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தானியர் :
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பிடனை கொலை செய்ய முயன்றதை பாகிஸ்தானியர் ஒருவர் புரூக்ளினின் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பிடன் ((Joe Biden))மற்றும் சில முக்கிய அதிகாரிகளை கொலை செய்ய பாகிஸ்தானை சேர்ந்த 47 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட் கூலிப் படையை அணுக முற்பட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
2022 ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி கசாம் சொலெய்மனி கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்த நிலையில், ஈரான் ராணுவத்திடமிருந்து தனது குடும்பத்தை காப்பற்ற மெர்ச்சன்ட் டிரம்ப் உள்ளிட்டோரைக் கொல்ல முயன்றதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved