மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தயாராக இருப்பதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா அறிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தையை எளிதாக்க, அனைத்து வழிமுறைகளுக்கும் உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.