உலகளவில் அமைதி ஏற்பட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய போப் லியோ உறுதிபடத் தெரிவித்தார். மேலும், போர் ஒருபோதும் தவிர்க்க முடியாதது அல்ல எனத் தெரிவித்த அவர், ஆயுதங்கள் ஒருபோதும் பிரச்னையை தீர்க்காது, அதிகரிக்கவே செய்யும் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.