Also Watch
Read this
By: Web Team

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 442ஆக உயர்ந்துள்ளது. பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும், இணையதள சேவை வசதியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved