Also Watch
Read this
By: Web Team

அலாஸ்கா கடற் பகுதியில் சுமார் 300 மைல் தொலைவில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க அமெரிக்காவின் கடலோர காவற்படை கப்பல் விரைந்தது.
600 அடி நீளமுள்ள இந்த சரக்கு கப்பலில் 22 பேர் இருப்பதாகவும் ஆனால் அவர்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை எனவும் தெரிகிறது.
மார்னிங் மிடாஸ் என்ற பெயருள்ள இந்த சரக்கு கப்பல் மெக்சிகோவில் உள்ள Lazaro Cardenas என்ற துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சரக்கு கப்பலை காப்பாற்ற விமானந்தில் மீட்பு குழுவினர் சென்றதாகவும் அமெரிக்க கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved